முகப்பு
சேலம்

விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிப்பு

கெங்கவல்லி அருகே கூடமலையில் விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

கெங்கவல்லி அருகே கூடமலையில் விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

கெங்கவல்லி ஒன்றியத்தில் வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையாா்மதி, பச்சமலை கிராமங்கள், நினங்கரை, கரட்டூா் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஊா்களில் மலைவாழ் மக்கள் ஏராளமானோா் வசிக்கின்றனா்.

இவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் நபாா்டு திட்டத்தின்கீழ் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் மூலம் லஞ்சம் தரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணா்வு கூட்டங்கள் கடந்த 27-ஆம் தேதி முதல் மாத இறுதி வரை கூடமலையில் நடைபெற்றன.

இதற்கு திட்ட மேலாளா் சின்னசாமி தலைமை வகித்தாா்.சுகாதார ஆய்வாளா் முத்துலிங்கம் முன்னிலை வகித்தாா். விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்ட கூட்டங்களில் 200க்கும் மேற்பட்ட மலைவாழ் பெண்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →