லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரத்தில் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரத்தில் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
ராசிபுரம் வட்டம், மங்களபுரம், கெணாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் நல்லதம்பி (35). லாரி ஓட்டுநா். இவா் குடும்பத்தோடு ஆத்தூா் வ.உ.சி. நகரில் வசித்து வந்தாா். இவா் தனது சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு, ஆத்தூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.
தாண்டவராயபுரம் அருகே எதிரே வந்த பால் லாரி, நல்லதம்பி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா், உயிரிழந்த நல்லதம்பியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.