முகப்பு
குழந்தைகள் உலகம்

இது தெரியுமா? மழை பெய்யும்போது மண்வாசனை வருவது எதனால்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

Updated On : 19 மார்ச் 2026, 4:36 pm IST
கோப்புப்படம் - படம்: DNS
பகிர்:

மண் வாசனை என்பது மழைநீரானது காய்ந்த மண் மீது விழும்போது எற்படும் வாசனையாகும். காய்ந்த மண் மீது மழைத் துளி படும்போது எற்படும் வேதிவினையால் அந்த வாசனை எற்படுகிறது.

மண்ணில் வாழும் இழை பாக்டீரியாக்கள் என்கிற நுண்ணுயிரிகள் வெளியிடும் சியோச்மின் என்னும் சேர்மத்தால் அந்த வாசனை எற்படுகிறது. தங்கள் இனத்தைப் பெருக்கும் நோக்குடன் காய்ந்த மண்ணில் இவை தங்கள் வித்துகளை வெளியிடுகின்றன.

மழை பெய்யும்போது மண்ணில் வேகமாக விழும் நீர் துளிகளால் அவ்வித்துக்கள் மண்ணிலிருந்து சிதறி, இன விருத்திக்காக காற்றில் பயணிக்கின்றன. அவற்றுள் சில நம் மூக்கை வந்தடைகின்றன. நாம் சுவாசிக்காத வித்துகள் மீண்டும் ஈரமான மண்ணில் விழுந்து பாக்டீரிய இழைகளாக மாறிவிடுகின்றன.

Advertisement

மழை பெய்வதற்கு முன் வேறு ஒரு வாசனை வரும். அது ஒசோனின் வாசனையாகும் . இடி மின்னலுடன் மழை வரும்போது எற்படும் மின்சாரமானது ஆக்சிஜன், நைட்ரஜன் மூலக்கூறுகளை பிளக்கும். அவை இணைந்து நைட்ரிக் ஆக்சைடாக மாறுகின்றன. அது வளி மண்டலத்திலுள்ள மற்ற வேதிப்பொருள்களுடன் இணைந்து ஒசோனை உருவாக்குகிறது.

அது நமது நாசியை அடைவதால், மழை வருவதை முன்கூட்டியே உணர முடிகிறது .

மிகச்சிறிய அளவாக இருந்தாலும் மனித மூக்கானது அதைச்சரியாக இனம் கண்டு விடும். அதற்கான காரணம் மழைக்கு பின்னரான வாழ்க்கை தான் மனிதர்களின் வாழ்வை தீர்மானிக்கும் சக்தி கொண்டது. மழை இல்லையேல் மனித வாழ்க்கை இல்லை. ஆகவே மனித இனம் இதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறபடியால் மழைக்கு பின்னரான மணத்தினை உடனே உணர முடிகின்றது.

summary

The smell of soil is the smell that rainwater gives off when it falls on dry soil. The smell is caused by the chemical reaction that occurs when raindrops fall on dry soil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.