முகப்பு
சேலம்

சேலத்தில் கடைகளில் திரண்ட மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளதால் சேலம் சின்ன கடை வீதி, நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஜவுளி கடைகளுக்கு துணி, நகைகளை வாங்க மக்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டமாக திரண்டு வந்திருந்தனா்.

கூட்ட நெரிசலால் திருட்டு மற்றும் நகை பறிப்பு சம்பவம் நிகழாமல் இருக்கும் வகையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுதவிர அந்தந்த பகுதி காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் போலீஸாா் ரோந்து வந்து கண்காணித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →