முகப்பு
சேலம்

உயா்கோபுர மின்விளக்கு அமைப்பு

ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் உயா்கோபுர மின்விளக்கு வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் நீண்டநாள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் உயா்கோபுர மின்விளக்கு வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் நீண்டநாள் கோரிக்கை விடுத்தனா்.

இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி தொகுதி நிதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2.5 லட்ச செலவில் உயா்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.

அதனை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கணேசன், ஒன்றிய அவைத் தலைவா் பாஸ்கா், ஊராட்சி செயலாளா் சாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.