ராகுல் கைதைக் கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
சேலம் கிழக்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் கிழக்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளியை கைது செய்யாமல் ராகுல் காந்தியை கைது செய்த பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி நகரத்தலைவர் எல்.முருகேசன் முன்னாள் நகரமன்றத்தலைவர் சக்ரவர்த்தி துணைத்தலைவர் தர்மராஜ் விவசாய அணி மாவட்டதலைவர் கல்லை கருப்பண்ணன் பொதுச்செயலாளர்கள் ஜி.பாஸ்கர் அய்யாவு நாட்டாமை செந்தில் சம்பத் குமார் கோவிந்தராஜ் மாவட்ட மகளரணி மகாலட்சுமி அன்புநிதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதனால் பத்து நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் அனைவரையும் கைதுசெய்து தனியார் மண்பத்தில் அடைத்து வைத்துள்ளார்.