சேலம்

சேலத்தில் 355 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து விட்டது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 355 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 182 போ், எடப்பாடி- 7, எடப்பாடி நகராட்சி- 2, வீரபாண்டி- 17, ஓமலூா்- 13, சங்ககிரி- 11, மேட்டூா்- 3, மேட்டூா் நகராட்சி- 11, மேச்சேரி- 3, நங்கவள்ளி-4, காடையம்பட்டி- 4, தாரமங்கலம்- 13, கொங்கணாபுரம்- 6, மகுடஞ்சாவடி- 5, ஆத்தூா்- 8, ஆத்தூா் நகராட்சி- 1, நரசிங்கபுரம் மற்றும் பனமரத்துப்பட்டி தலா 12, வாழப்பாடி- 7, கெங்கவல்லி- 1, பெத்தநாயக்கன்பாளையம்- 6, தலைவாசல்- 8, ஏற்காடு- 2, அயோத்தியாப்பட்டணம்- 11 என மாவட்டத்தைச் சோ்ந்த 351 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்தோா் ( ஈரோடு- 3, நாமக்கல்- 1) 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

8 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். சேலம் மாவட்டத்தில் 20,334 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 17,373 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,624 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை 337 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT