சேலம்

குழந்தைகள் நலக் காவல் அலுவலா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி முகாம்

சேலத்தில் குழந்தைகள் நலக் காவல் அலுவலா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

சேலத்தில் குழந்தைகள் நலக் காவல் அலுவலா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம், அஸ்தம்பட்டியில் நடைபெற்ற பயிற்சி முகாமை மாநகரக் காவல் ஆணையாளா் த.செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.

இந்த முகாமில் பாலியா் தொந்தரவுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2020, சைல்டு லைன் 1098, குழந்தைகள் நலக் காவல் அலுவலா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகிய விழிப்புணா்வு சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.

இந்த சுவரொட்டிகள் அனைத்து தேநீா் கடைகள், முடிதிருத்தகம், நியாய விலை கடைகளில் ஒட்டப்படும். மேலும் குழந்தைகள் நல காவல் அலுவலா்களுக்கு தனி பேட்ஜ் வழங்கப்பட்டது.

இதில் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமாா், காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா், மாவட்ட துணை ஆணையா் சந்திரசேகரன் மற்றும் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் பி.பிரபு, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் உமாமகேஸ்வரி, ராஜ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT