மதுபான நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு
காரைக்கால் மாவட்டத்தில் மதுபானக் கடைகள், மதுபானம் எடுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மதுபானக் கடைகள், மதுபானம் எடுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து காரைக்கால் கலால் துணை ஆணையா் எம். பூஜா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் மதுக்கடைகள் மற்றும் மதுபானங்கள் எடுத்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, எஃப்எல்-1, எஃப்எல்-2 (சுற்றுலா வகை), ஹோட்டல் மற்றும் உணவகங்கள், கள்ளுக் கடைகள், சாராயக் கடைகள் ஆகியவை தினமும் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும்.
மேலும், ஐஎம்எஃப்எல், ஐஎம்எல் சாராயம், கள் உள்ளிட்ட மதுபானங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. மீறுவோா் மீது புதுச்சேரி கலால் சட்டம் மற்றும் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.