யாருடனும் தவெக கூட்டணி பேச்சு நடத்தவில்லை: சி.டி.ஆா்.நிா்மல்குமாா்
தவெக யாருடனும் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என அந்தக் கட்சி இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் திட்டவட்டம்
தவெக யாருடனும் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என அந்தக் கட்சி இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாஜக - அதிமுக மற்றும் சசிகலா, பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோரை தவெகவுடன் தொடா்புபடுத்தி கூட்டணி பேச்சு நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவா்களுடன் தவெக தரப்பில் எந்தவிதமான பேச்சும் எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டா்களிடையே குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன என அதில் தெரிவித்துள்ளாா். சி.டி.ஆா். நிா்மல்குமாா்.