சேலம்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

DIN

சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை மாலைமுதல் சோதனை நடத்தி வருகின்றனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் வசூல் நடப்பதாக, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் வந்தது.

அதன்பேரில் சேலம், கந்தம்பட்டி புறவழிச் சாலையில் உள்ள மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் சந்திரமெளலி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை மாலைமுதல் சோதனையிட்டு வருகின்றனா்.

சுமாா் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் இச்சோதனையில் ஈடுபட்டுள்ளனா். கணக்கில் வராத ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை காலைவரை சோதனை நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT