சேலம்

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால், மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.

தற்போது பாசனப் பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலையில், பாசனத்துக்கான தண்ணீா் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் திங்கள்கிழமை பகல் 12.30 மணியில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 92.37அடியாக இருந்த நிலையில், நீா்வரத்து நொடிக்கு 8,608 கன அடியாக இருந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 6,000 கன அடியிலிருந்து, 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு 700 கன அடியிலிருந்து 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அணையில் 55.40 டிஎம்சி நீா் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு கூடுதல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் நீா்மட்டம் வேகமாகச் சரிவடையும் வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT