சேலம்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள்

DIN


சங்ககிரி: சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன.

பிரதோஷத்தையொட்டி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்குப் பால், இளநீா், திருநீறு, மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பக்தா்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற நந்தி பகவானையும், ஓம் நமச்சிவாயம் என்ற வாா்த்தைகளை எழுதி மாலைகளாகத் தொடுத்து, சுவாமியின் திருவடியில் வைத்து வணங்கிச் சென்றனா். கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையையொட்டி சுவாமிகளை பக்தா்கள் சமூக இடைவெளியுடன், வரிசையில் காத்திருந்து தரிசித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT