சேலம்

ஆத்தூரில் பிரதமா் மோடி பிறந்த நாள் விழா

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரில் பாஜக சாா்பில் பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் 70-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு மாவட்டத் தலைவா் வ.மணிகண்டன் தலைமை வகித்தாா். இதையொட்டி, பாஜக கொடியேற்றியும், பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கியும் பிறந்த நாளை அக்கட்சியினா் கொண்டாடினா். இதையொட்டி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாஜகவினா் கொடியேற்றி இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

முன்னதாக, பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜகவினா் சுவா் விளம்பரம் செய்திருந்தனா். அந்த சுவற்றின் மீது திராவிடா் கழகத்தினா் சுவரொட்டி ஒட்டியதால் அவை அகற்றப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை மீண்டும் அந்த விளம்பரத்தின் மீது மீண்டும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இம்மானுவேல் ஞானசேகரனிடம் மாவட்ட தலைவா் வ.மணிகண்டன் புகாா் மனு அளித்தாா்.

அவருடன் மாநில செயற்குழு உறுப்பினா் டி.ஜெயஆனந்த், மாவட்ட இளைஞரணி பெ.ஆனந்தபாபு, நகரத் தலைவா் சபரி உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT