முகப்பு
சேலம்

விபத்துக்குள்ளான வட்டாட்சியா் அலுவலக ஜீப் ஓட்டுநா் காயம்

கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலக ஜீப் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் பலத்தக் காயமடைந்தாா்.

Updated On : 4 ஏப்ரல், 2021 at 12:32 AM
பகிர்:

கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலக ஜீப் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் பலத்தக் காயமடைந்தாா்.

கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலக ஜீப்பில் அதன் ஓட்டுநா் அந்தோணி சனிக்கிழமை மாலை வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு ஆத்தூா் நோக்கிச் சென்றாா். ஒதியத்தூா் அருகே களக்காடு பகுதியைக் கடந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா்

தகவல் அறிந்த கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன்,நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். இந்த விபத்தில் ஜீப் ஓட்டுநா் அந்தோணி பலத்தக் காயமடைந்ததாா். அவா் மீட்கப்பட்டு கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா்.

Advertisement

இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.