முகப்பு
தமிழ்நாடு

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது தொடர்பாக....

Updated On : 30 ஏப்ரல், 2026 at 8:19 PM
மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள். - படம்: டிஎன்எஸ்
பகிர்:

சோழபுரம் அருகே விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் அருகே மானம்பாடி கிராமத்தில் அலெக்சாண்டர் என்பவர் வயலில் இன்று(ஏப். 30) விவசாய வேலை நடைபெற்று வந்துள்ளது.

அப்போது, வரப்பு பகுதியை வெட்டும்போது, உலோக சிலைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த சிலைகள் மீட்கப்பட்டது.

Advertisement

ஒரு அடி உயரமுள்ள யானை மீது அமர்ந்த நிலையில் அய்யனார் சிலை மற்றும் ஐந்து அங்குலத்தில் இரண்டு சிலைகள் மற்றும் உடைந்த சிலையின் பாகங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலைகள் ஐம்பொன்னால் ஆன சிலைகள் எனக் கூறப்படுகிறது. இந்த சிலைகள் எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வுக்குப் பின் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

summary

Three Panchaloha idols have been recovered from agricultural land near Cholapuram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.