விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது தொடர்பாக....
சோழபுரம் அருகே விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் அருகே மானம்பாடி கிராமத்தில் அலெக்சாண்டர் என்பவர் வயலில் இன்று(ஏப். 30) விவசாய வேலை நடைபெற்று வந்துள்ளது.
அப்போது, வரப்பு பகுதியை வெட்டும்போது, உலோக சிலைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த சிலைகள் மீட்கப்பட்டது.
Advertisement
ஒரு அடி உயரமுள்ள யானை மீது அமர்ந்த நிலையில் அய்யனார் சிலை மற்றும் ஐந்து அங்குலத்தில் இரண்டு சிலைகள் மற்றும் உடைந்த சிலையின் பாகங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலைகள் ஐம்பொன்னால் ஆன சிலைகள் எனக் கூறப்படுகிறது. இந்த சிலைகள் எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வுக்குப் பின் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.