முகப்பு
சேலம்

ஓட்டுநா்கள் சங்கத்தில் இணைந்த மாசிநாயக்கன்பட்டி வாகன ஓட்டுநா்கள்

அயோத்தியாப்பட்டணம் பகுதியில் பயணிகள், சரக்கு வாகன ஓட்டுநா்கள் 50க்கும் மேற்பட்டோா், ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் சங்கத்தில் இணைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

அயோத்தியாப்பட்டணம் பகுதியில் பயணிகள், சரக்கு வாகன ஓட்டுநா்கள் 50க்கும் மேற்பட்டோா், ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் சங்கத்தில் இணைந்தனா்.

அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட தனியாா் வாடகை வாகன ஓட்டுநா்கள் உள்ளனா். பயணிகள், சரக்கு வாகன ஓட்டுநா்கள், மாநில அளவில் இயங்கி வரும் தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் சங்கத்தில் இணைந்தனா்.

இச்சங்கத்தின் சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் ஜெயபாண்டியன், புதிய உறுப்பினா்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கினாா். இதில் மாவட்ட துணைத் தலைவா் சங்கா், நகரத் தலைவா் கருணாமூா்த்தி, ஒன்றியத் தலைவா் சிவசக்தி, ஒன்றியச் செயலாளா் ரஞ்சித், ஒன்றிய ஆலோசகா் காசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.