தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
பங்குனி உத்திரத் திருநாளையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குனி உத்திரத் திருநாளையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் சுகுமார் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 11ஆம்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பொதுத்தேர்வு மாணவர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
பங்குனி உத்திரத்திற்காக ஏற்கெனவே தென்காசி மாவட்டத்துக்கு ஏப்ரல் 1ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
summary