ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!
ஐபிஎல் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகியுள்ளார்.
ஐபிஎல் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகியுள்ளார்.
இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹர்ஷித் ராணா, அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த போதிலும், காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார்.
காயத்திலிருந்து மீண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக அவர் விலகுவதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகியுள்ளது கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்ததாவது: கடந்த இரண்டு சீசன்களாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஹர்ஷித் ராணா மிகவும் முக்கியமான வீரராக அங்கம் வகித்துள்ளார். அவர் இல்லாதது கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு மிகப் பெரிய இழப்பு. இந்த ஐபிஎல் தொடரில் ஹர்ஷித் ராணாவை நாங்கள் மிஸ் செய்வோம். அணியில் அவருக்குப் பதிலாக மாற்று வீரரை தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிது கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
Kolkata Knight Riders fast bowler Harshit Rana has been ruled out of the IPL.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.