சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 15 லட்சம் பறிமுதல்
சேலம் தெற்கு தொகுதியில் வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 15.37லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் தெற்கு தொகுதியில் வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 15.37லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள், வியாபாரிகள் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கத் தொகையை எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தோ்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் சேலம் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் 24 மணி நேரமும் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
சேலம் தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களில் உரிய ஆவணமின்றி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட மொத்தத் தொகையான ரூ.15 லட்சத்து 37 ஆயிரத்து 326 பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.