எடப்பாடி பகுதியில் திடீர் கனமழை
எடப்பாடி சுற்றுப்பகுதியில் ஞாயிறு அன்று மாலை திடீரென கனமழைக் கொட்டியது.
எடப்பாடி சுற்றுப்பகுதியில் ஞாயிறு அன்று மாலை திடீரென கனமழைக் கொட்டியது.
இதனால் இப்பகுதியில் கடுமையான வெப்பம் குறைந்த குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை நிலவி வருகிறது. எடப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பநிலை நிலவி வந்தது.
பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவில் அனல் காற்று வீசியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில், மேலும் வெப்பம் அதிகரிந்து பகல்நேர வெப்பநிலை 105 டிகிரி வரை சென்றது.
இந்நிலையில் ஞாயிறு அன்று மாலை திடீரென எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் கனமழை கொட்டத்தொடங்கியது.
இதையும் படிக்கலாமே.. கரோனா நோயாளிகள் இந்தத் தவறை செய்ய வேண்டாம்: மும்பை மாநகராட்சி
தொடக்கத்தில் மெதுவாக தொடங்கிய மழை, தொடர்ந்த கனமழையாக ஆரவாரம் இன்றி, இரவு வரை விட்டு விட்டு பெய்து வந்தது.
இதனால் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் நிலவிந்த வறட்சியான நிலைமை மாறி, குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை ஏற்பட்டது. கடும் வெப்பதால் அவதி அடைந்த மக்கள் திடீர் மழையால், மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோடை உழவு செய்திட தங்களை தயார்படுத்தி வருகின்றர்.