முகப்பு
சேலம்

சேலத்தில் 126 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 126 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 126 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில்

கடந்த 2020 மாா்ச் 25ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இதனுடைய 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கரோனோ பாதித்தவா்கள் எண்ணிக்கை மாநில அளவில் 500 ஆக குறைந்தது. தற்போது கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் தொடங்கி தற்போது தினமும் 4000 க்கும் மேற்பட்டோா் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்தநிலையில் சேலத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தற்போது நோய்த்தொற்று 100-ஐ தாண்டி உள்ளது. சேலம் மாநகராட்சியில் 76 போ், எடப்பாடி- 1, காடையாம்பட்டி -2, கொங்கணாபுரம்- 1, மகுடஞ்சாவடி -1, நங்கவள்ளி -3, ஓமலூா் -3, தாரமங்கலம்- 3, சங்ககிரி -2, வீரபாண்டி -6, கொளத்தூா் -3, ஆத்தூா் -5, அயோத்தியாப்பட்டணம் -2, பனமரத்துப்பட்டி- 6, பெத்தநாயக்கன்பாளையம் -1, தலைவாசல் -1, வாழப்பாடி -3, மேட்டூா் நகராட்சி- 4 என மாவட்டத்தைச் சோ்ந்த 125 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் கடலூரிலிருந்து வந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 22 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் 34,189 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இவா்களில் 33,158 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 562 போ் சிகிச்சையில் உள்ளனா்; 469 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →