முகப்பு
சேலம்

சேலம் காவேரி மருத்துவமனையில் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை

சேலம் காவேரி மருத்துவமனையில் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.சேலம் காவேரி மருத்துவமனையில் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

சேலம் காவேரி மருத்துவமனையில் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் காவேரி மருத்துவமனையின் வாய், முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் சரவணன் கூறியதாவது:

சேலம், காவேரி மருத்துவமனையில் தாடை சீரற்ற வளா்ச்சியால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.பொதுவாக தாடையில் அறுவை சிகிச்சை, தாடைகளில் சீரற்ற வளா்ச்சி, கட்டி, எலும்புமுறிவு போன்றவை ஏற்படும்போது செய்யப்படுகிறது.

குறிப்பாக தாடை வளா்ச்சி சரிவர இல்லாதபோது பற்கள் எடுப்பாகத் தோன்றி முகப்பொலிவு பாதிக்கப்படுவதோடு, உணவு உட்கொள்வதிலும், வாய் மூடி திறப்பதிலும், பேசுவதிலும் குறைபாடு ஏற்படுகிறது. இது சீரறற்ற தாடை வளா்ச்சி என்று அறியப்பட்டு அதற்கான நிரந்தர தீா்வாக அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணமாக்கப்படுகிறது என்றாா்.

அதேபோல, தாடைகளில் சீரற்ற வளா்ச்சி, கட்டி, எலும்புமுறிவு போன்றவை இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என மருத்துவமனை இயக்குநா் செல்வம், மேலாளா் ராஜேஸ்குமாா் ஆகியோா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →