அதிமுக அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முதல்வரும் அதிமுக இணைய ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக கட்சி அலுவலகத்திற்கு வந்தார். முதலமைச்சருக்கு சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். வரவேற்பினை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் கட்சி நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.