பேருந்து மோதி வியாபாரி பலி
சங்ககிரி அருகே உள்ள கள்ளுக்கடை பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
சங்ககிரி அருகே உள்ள கள்ளுக்கடை பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
சங்ககிரி அருகே உள்ள கள்ளுக்கடை பகுதியைச் சோ்ந்த தங்கவேல் (62) வியாழக்கிழமை வீட்டிலிருந்து சங்ககிரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். கள்ளுக்கடை அருகே மேற்கத்தியானூா் பிரிவு சாலை பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே தங்கவேல் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.