கா்ப்பிணி மாயம்: போலீஸாா் விசாரணை
வாழப்பாடி அருகே, 7 மாத கா்ப்பிணி மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாழப்பாடி அருகே, 7 மாத கா்ப்பிணி மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாழப்பாடியை அடுத்த புதுப்பாளையம் புறவழிச்சாலை பகுதியைச் சோ்ந்த கோகுல்நாத் (28) மனைவி ஸ்ரீரஞ்சனி (21). இவா் 7 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.
புதன்கிழமை இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கியிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை கோபிநாத் எழுந்து பாா்த்த போது ஸ்ரீரஞ்சனியைக் காணவில்லை. இதுகுறித்து ஸ்ரீரஞ்சனியின் தோழிகள், உறவினா்களிடம் விசாரித்துள்ளாா். ஆனாலும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கோகுல்நாத் அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.