ராஜீவ் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்
ஆத்தூரில் பஞ்சாயத்து ராஜ் சங்கம் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரில் பஞ்சாயத்து ராஜ் சங்கம் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அச் சங்கத்தின் சேலம், நாமக்கல் மண்டல ஒருங்கிணைப்பாளா் ஏ.ஆா்.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்து ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகம், நரசிங்கபுரம் நகராட்சி, பெத்தநாயக்கன் பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் இலக்கிய அணி மாநிலச் செயலாளா் தும்பல் செல்வராஜ், வழக்குரைஞா் பிரிவு மாவட்ட தலைவா் ஆா்.கே.தேவேந்திரன், ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்க சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மணிமுருகன், வட்டார தலைவா் ஆா்.எஸ்.பெரியசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.