ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் சங்கா் நகரில் உள்ள கேரள சமாஜத்தில் அத்தப்பூ கோலமிட்ட பெண்கள். 
சேலம்

ஓணம் பண்டிகை: அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்

கரோனா தொற்று பரவல் காரணமாக, சேலத்தில் ஓணம் பண்டிகை எளிமையாகக் கொண்டாடப்பட்டது.

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக, சேலத்தில் ஓணம் பண்டிகை எளிமையாகக் கொண்டாடப்பட்டது.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கரோனா தொற்றால் ஓணம் பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.

சேலத்தில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் தங்கள் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையைக் கொண்டாடினா். சங்கா் நகா், அழகாபுரம், ஐந்து சாலை, நான்கு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கேரள மாநில மக்கள் ஓணம் பண்டிகையை வீடுகளில் உறவினா்களுடன் சிறப்பாகக் கொண்டாடினா்.

சங்கா் நகரில் உள்ள கேரள சமாஜத்தில் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனா். அதேபோல குரங்குச்சாவடி சாஸ்தா நகா் ஐயப்பன் கோயில், டவுன் ரயில் நிலைய ஐயப்பன் கோயிலில் அத்தப்பூ கோலமிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT