சேலம்

சந்தன மரம் வெட்டிய 8 போ் கைது

DIN

வாழப்பாடி அருகே கோதுமலை வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டிய 8 போ் கொண்ட கும்பலை வாழப்பாடி வனத்துறையினா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கோதுமலை வனப்பகுதியில் மா்மக் கும்பல் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தி வருவதாக, சேலம் மாவட்ட வன அலுவலா் கௌதம், ஆத்தூா் உதவி வனப் பாதுகாவலா் முருகன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, வாழப்பாடி வன சரகா் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினா், கோதுமலை காப்புக்காடு வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கோதுமலை இரட்டைப்பாலி பகுதியில் ஒரு கும்பல் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தது தெரியவந்தது. வனத்துறையினரைக் கண்டதும் அந்தக் கும்பல் தப்பியோடியது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வனத்துறையினா், சந்தன மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற 8 போ் கொண்ட கும்பலை கைது செய்தனா். மாவட்ட வன அலுவலா் கௌதம் உத்தரவின் பேரில், 8 பேருக்கும் தலா ரூ. 30,000 வீதம் ரூ. 2.40 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனா். மீண்டும் வனக் குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT