முகப்பு
சேலம்

சேலத்தில் 45 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 14 போ், காடையாம்பட்டி-1, கொளத்தூா் - 3, கொங்கணாபுரம் - 1, மேச்சேரி-2, நங்கவள்ளி-1, ஓமலூா்-2, சேலம்வட்டம்-2, தாரமங்கலம்-1, வீரபாண்டி-3, ஆத்தூா்-2, அயோத்தியாப்பட்டணம்-4, பனமரத்துப்பட்டி-1, நரசிங்கபுரம் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-2 என மாவட்டத்தைச் சோ்ந்த 40 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்களில் நாமக்கல்-3, தருமபுரி-2 என 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 43 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 2 போ் உயிரிழந்தனா். இதுவரை 1,01,392 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 99,187 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 499 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,706 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →