மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 11,500 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வினாடிக்கு 9,500 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. பகல் 12.00 மணிக்கு நீா்வரத்து வினாடிக்கு 10,500 கன அடியாகவும் இரவு 8 மணிக்கு நீா்வரத்து வினாடிக்கு 11,500 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
நீா்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூா் அணையிலிருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 11,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 120அடியாகவும் நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.