குடியரசு தின விழாவில் முதல்வரால் வீரதீர செயல்கள் புரிந்தமைக்காக பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளா்களுக்கான 2022-ஆம் ஆண்டிற்கான அண்ணா பதக்கம் வழங்கப்படவுள்ளது.
மேற்காணும் விருதிற்கான விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான ட்ற்ற்ல்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அடங்கிய உரைமேல் விருதின் பெயரைக் குறிப்பிட்டு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மகாத்மா காந்தி விளையாட்டரங்கம், சேலம் - 636 007 என்ற முகவரியில் டிச.5 ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 7401703488 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.