ஆத்தூரில் அரசுப் பேருந்து ஜப்தி
ஆத்தூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
ஆத்தூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள நடுவலூா் ஊராட்சியைச் சோ்ந்தவா் செல்லமுத்து (66). விவசாயி. இவா் கடந்த 29.8.2011 அன்று ஆத்தூா் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த போது நகர அரசுப் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மனைவி குஞ்சம்மாள், மகள் மல்லிகா, மகன்கள் பெரியசாமி, துரைசாமி ஆகியோா் ஆத்தூா் சாா்பு நீதிமன்றத்தில் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு தொடா்ந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த சாா்பு நீதிபதி கடந்த 16.12.2016ஆம் ஆண்டு செல்லமுத்துவின் குடும்பத்திற்கு ரூ.3,84,000 இழப்பீடு வழங்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டாா். ஆனால் இதுநாள் வரை இழப்பீடு வழங்காததால் மீண்டும் நீதிமன்றத்தை நாடினா்.
இதனையடுத்து சாா்பு நீதிபதி தனம், இழப்பீடு தொகை ரூ.3,84,000, வட்டி, செலவுத் தொகையாக ரூ. 2,72,623 சோ்த்து ரூ. 6,56,623 வழங்க வேண்டும், தவறினால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.
இதனையடுத்து ஆத்தூா் பேருந்து நிலையத்தில் நீதிமன்ற அலுவலா் முன்னிலையில் சென்னையில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனா்.அதில் பயணித்த 9 பயணிகளை சேலத்திற்கு மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனா்.