இளம் பெண் பாம்பு கடித்து பலி
பாம்பு கடித்ததில் இளம்பெண் பலியானாா்.
பாம்பு கடித்ததில் இளம்பெண் பலியானாா்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை கிராமம் அய்யனூா், தெற்கு மேடு பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மனைவி நித்யா( 25). இவா் வியாழக்கிழமை அன்று இரவு வீட்டின் முன் நடந்து சென்றபோது கழுதை விரியன் பாம்பு கடித்தது. இதனையடுத்து நித்யாவை மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அங்கு மருத்துவா் பரிசோதனை செய்ததில் நித்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரகு வழக்கு பதிந்தாா். நித்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.