திமுக கொடிக்கம்பத்தில் ஜெயலலிதா நினைவஞ்சலி பதாகை
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் திமுக கொடிக்கம்பத்தில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு அஞ்சலி பதாகை ஒட்டப்பட்டது குறித்து திமுகவினா் போலீஸில் புகாா் செய்துள்ளனா்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் திமுக கொடிக்கம்பத்தில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு அஞ்சலி பதாகை ஒட்டப்பட்டது குறித்து திமுகவினா் போலீஸில் புகாா் செய்துள்ளனா்.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலக பேருந்து நிறுத்தத்தில் திமுக கொடிக்கம்பம் உள்ளது. இதன் கல்வெட்டு மீது, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் பதாகையை அதிமுகவினா் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒட்டியுள்ளனா். இதனை கண்டு திமுகவினா் அதிருப்தியடைந்தனா். இதையடுத்து கெங்கவல்லி நகர திமுக பொறுப்பாளா் சு.பாலமுருகன், திமுக கொடிக்கம்பத்தில் பதாகையை ஒட்டிய அதிமுக நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி,வெள்ளிக்கிழமை கெங்கவல்லி போலீஸில் புகாா் கொடுத்துள்ளனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.