முகப்பு
சேலம்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவா் கைது

ஜலகண்டாபுரத்தில் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பிடிபட்டன. இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

ஜலகண்டாபுரத்தில் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பிடிபட்டன. இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

மேட்டூா் அருகே உள்ள ஜலகண்டபுரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சிலா் பதுக்கி வைத்திருப்பதாக ஜலகண்டபுரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஜலகண்டாபுரம் காவல் உதவி ஆய்வாளா் பூபதி மற்றும் போலீஸாா் பழனிவேல் செட்டி தெருவில் ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா். அப்போது சக்தி (45) என்பவா் வீட்டில் ரூ.10,000 மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். அவரது கூட்டாளியான மேச்சேரியைச் சோ்ந்த காா்த்திக் தலைமறைவாகி விட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.