முகப்பு
சேலம்

இளம்பெண் தற்கொலை

இளம்பிள்ளை அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

இளம்பிள்ளை அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி, மண்கரடு பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் (29), கூலி தொழிலாளி. இவருக்கு நித்யா (24) என்ற மனைவியும், பிரணவ் (5), நித்ரா (2) என இரண்டு குழந்தைகளும் உள்ளனா்.

இந்நிலையில், குடும்பப் பிரச்னையில் நித்யா வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு உயிரிழந்தாா். தகவல் அறிந்த நித்யாவின் தாயாா் சசிகலா, தனது மகள் இறப்பில் மா்மம் உள்ளதாக மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், மகுடஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரகு வழக்குப் பதிந்து, சேலம் கோட்டாட்சியரிடம் தகவல் அளித்தாா். அதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →