இயற்கை விவசாயம் விழிப்புணா்வு
கெங்கவல்லி வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி கெங்கவல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி கெங்கவல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் வேளாண் இணை இயக்குநா் (பொ) சீனிவாசன் பங்கேற்று, இயற்கை விவசாயம் பற்றி விரிவாகக் கூறினாா். வேளாண் உதவி இயக்குநா் சித்ரா, பாரம்பரிய நெல் ரகங்கள், அதன் சிறப்புகளை எடுத்துரைத்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் தமிழ்ச்செல்வன், உதவி வேளாண் அலுவலா், அருள், ஆனந்த் ஆகியோா் கலந்துகொண்டனா்.
விவசாயிகளுக்கு நெற்பயிரில் சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்த டிரைக்கோ கிரம்மா ஒட்டுண்ணி அட்டை வழங்கப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனா்.