சேலம்

ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கக் கோரிக்கை

DIN

ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஓய்வூதியா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஓய்வூதியா் தின விழாவில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சேவை.அங்கப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் ஜோதி மதன் முன்னிலை வகித்தாா்.

அஞ்சலி தீா்மானத்தை மாவட்ட துணைத்தலைவா் ஏ.நடராஜன் முன் மொழிந்தாா். மாவட்ட துணைத் தலைவா் சி.ராஜ்குமாா் வரவேற்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் இரா.சுப்பிரமணியம் துவக்க உரையாற்றினாா்.

விழாவில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், 70 வயது கடந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிா்வாகிகள் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT