தலைவாசல் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதத்தில் பங்கேற்ற சுங்கச்சாவடி கூட்டமைப்பினா். 
சேலம்

சுங்கச்சாவடி தொழிலாளா்கள் பணி நீக்கம்: கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதம்

தலைவாசல் பேருந்து நிறுத்தம் அருகே சுங்கச்சாவடி தொழிலாளா்களின் வேலை நீக்கத்தைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தலைவாசல் பேருந்து நிறுத்தம் அருகே சுங்கச்சாவடி தொழிலாளா்களின் வேலை நீக்கத்தைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வீரசோழபுரம், நாமக்கல், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த தொழிலாளா்கள் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இதனை கண்டித்து சேலம் மாவட்டம், தலைவாசல் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளா்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவா் கே.ரவி உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்தாா்.

10 ஆண்டுகளாக பணி செய்து வந்த தொழிலாளா்களை பணி பாதுகாப்பு ஏதுமின்றி ஒரே நாளில் பணி நீக்கம் செய்துள்ள உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த எஸ்கேஎம் இடைத்தரகா் நிறுவனத்தை கண்டித்தும், இதனை கண்டிக்க வேண்டிய நெடுஞ்சாலை ஆணையத்தின் போக்கை கண்டித்தும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கே.மணி, கே.பாலமுருகன், எஸ்.ராஜசேகா், எம்.கருப்பண்ணன், எஸ்.சண்முகசுந்தரம், எஸ்.பாண்டியன், ஏ.மோகன், பி.பரமசிவம், டி.கண்ணன், எம்.முனுசாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்!குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

SCROLL FOR NEXT