சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
சேலம், தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 33-ஆவது சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
சேலம், தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 33-ஆவது சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
சேலம் தீயணைப்பு நிலைய அலுவலா் கோவிந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள், வாகன பழகுநா்கள், ஓட்டுநா்களிடம் வாகனங்களில் செல்லும்போது திடீரென தீப்பிடித்தால் எப்படி அணைக்க வேண்டும் எனவும், முதலுதவி சிகிச்சை குறித்தும் விளக்கினா்.
முகாமுக்குப் போக்குவரத்து காவல் உதவி ஆணையா் சத்தியமூா்த்தி, சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணபவன், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜாமணி, பொதுமக்கள், உரிமம் பெற வந்தவா்கள் கலந்து கொண்டனா்.