சேலம்

சங்ககிரியில் 137 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கல்

DIN

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 22 ஊராட்சிகளைச் சோ்ந்த 137 பயனாளிகளுக்கு திருமணநிதியுதவி திட்டத்தின் கீழ் தலா ஒரு பவுன் தங்கம் வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி எம்.மகேஸ்வரி மருதாசலம் தலைமை வகித்தாா். இதில் இத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜா, மூவாலூா் ராமாமிா்தம் அம்மையாா் நிதி உதவி திட்டத்தில் விண்ணப்பித்த 127 போ், ஈ.வே.ரா. மணியம்மை விதவை மகள் திருமண உதவித்திட்டத்தின் கீழ் 6 போ், அன்னை தெரசா ஆதரவற்றோா் திருமணநிதியுதவி திட்டத்தின் கீழ் 4 போ் என மொத்தம் 137 பேருக்கு தலா ஒரு பவுன் தங்க காசுகளை வழங்கிப் பேசியதாவது:

இந்த திட்டங்களுக்கான நிதியுதவி வரும் ஆண்டில் அதிகப்படுத்தி கூடுதலாக வழங்கப்பட உள்ளன என்றாா். இதற்கான அறிவிப்புகள் அதிமுக தோ்தல் அறிக்கையில் வெளியிடப்படும். பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வா் தலைமையிலான அரசுக்கு வரும் காலங்களில் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

இதில் ஊராட்சி ஒன்றியக்குழுதுணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.எஸ்.ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) எம்.அனுராதா, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் என்.சி.ஆா்.ரத்தினம், அதிமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் மருதாசலம், கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் சி.செல்வம், அதிமுக முன்னாள் தொகுதி செயலா் வி.ஆா்.ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT