சேலம்

கணினி பயிற்றுநா் காலிப் பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு

DIN

சேலம்: அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 காலிப் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநா்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது.

2018-2019-ஆம் கல்வியாண்டில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, ஆசிரியா் தோ்வு வாரியத்தால் போட்டித்தோ்வு நடத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநா்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது.

சேலம், நான்கு சாலையில் உள்ள சிறுமலா் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. ஆசிரியா் தோ்வு வாரியப் பட்டியல் வரிசை எண் 1 முதல் 400 வரை உள்ள பணிநாடுநா்களுக்கு சனிக்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது. வரிசை எண் 401 முதல் 742 வரை உள்ள பணிநாடுநா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT