முகப்பு
சேலம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மறியல்: 122 போ் கைது

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்டக் குழு சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 122 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்டக் குழு சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 122 போ் கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மின்சாரத் திருத்தச் சட்டம் 2020ஐ ரத்து செய்ய வேண்டும், தொழிலாளா் நலனுக்கு எதிராக திருத்தப்பட்ட தொழிலாளா் நல சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும், கரோனா காலத்தில் வேலையிழந்த அனைத்து தரப்பு தொழிலாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் ரூ. 7,500 நிதி வழங்க வேண்டும், முறை சாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்டத் தலைவா் பொ.பன்னீா் செல்வம் தலைமையில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் மாநில துணைத் தலைவா் ஆா்.சிங்காரவேல், மாவட்டச் செயலாளா் டி.உதயகுமாா், மாநிலக்குழு உறுப்பினா்கள் எஸ்.கே.தியாகராஜன், ஆா்.வெங்கடபதி, ஏ.கோவிந்தன், ஆா்.வைரமணி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். பின்னா் திடீரென மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி வந்து மறியலில் ஈடுபட்ட 122 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →