விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பட்டுத்துறை ஊராட்சியில், விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா ஊராட்சி மன்றத் தலைவா் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.
சேலம்விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பட்டுத்துறை ஊராட்சியில், விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா ஊராட்சி மன்றத் தலைவா் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பட்டுத்துறை ஊராட்சியில், விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா ஊராட்சி மன்றத் தலைவா் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.
இதில், கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அ.மருதமுத்து கலந்துகொண்டு விலையில்லா ஆடுகளை வழங்கினாா். விழாவில் பயனாளிகளுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த விழாவில், ஒன்றியச் செயலாளா் சந்திரசேகா், கால்நடை உதவி இயக்குநா் மருத்துவா் அய்யாசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் விஜயகுமாா், கால்நடை உதவி மருத்துவா்கள் சக்திவேல், ராஜா, கோழியின நோய் ஆய்வக இணைப் பேராசிரியா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், பயனாளிகளுக்கு கொட்டகை அமைக்க ரூ. 2 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.