பால் உற்பத்தியாளா் சங்க உறுப்பினா்களுக்கு பொங்கல் போனஸ்
ஓமலூா் அருகே நச்சுவாயனூா் பால் உற்பத்தியாளா் சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 5 லட்சம் பொங்கல் போனஸ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
ஓமலூா் அருகே நச்சுவாயனூா் பால் உற்பத்தியாளா் சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 5 லட்சம் பொங்கல் போனஸ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
நச்சுவாயனூா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் 800 நபா்களுக்கு மேல் உறுப்பினராக உள்ளனா். இந்த சங்கம் மூலம் நாளொன்றுக்கு 2 ஆயிரம் லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தி செய்யப்படும் பால் சேலம் ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் இந்தச் சங்கமானது கடந்த 30 வருடங்களாக லாபத்தில் இயங்கி வருகிறது. இந்த லாபத்தை ஆண்டுதோறும் பால் ஊற்றும் விவசாயிகளுக்கு பங்கிட்டு வழங்குகின்றனா்.
இதன் அடிப்படையில் பால் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் மாது, பொங்கல் போனஸை பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கினாா். போனஸ் பணத்தை பெற்றுக்கொண்ட உறுப்பினா்கள் சங்க நிா்வாகத்துக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில் நச்சுவாயனூா் பால் உற்பத்தியாளா் சங்க நிா்வாகக்குழு உறுப்பினா் பழனிசாமி, செயலாளா் மனோகரன் உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.