சேலம்

சங்ககிரியில் எம்.பி. தலைமையில் ஆய்வுக்கூட்டம்

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நாமக்கல் மக்களவை உறுப்பினா் தலைமையில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சங்ககிரி, தேவூா், அரசிராமணி, இடங்கணசாலை, இளம்பிள்ளை, தாரமங்கலம் உள்ளிட்ட பேரூராட்சிகள், சங்ககிரி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் அரசு ஒப்பந்தப் புள்ளிகளைப் பெற்று நடைபெற்று வரும் சாலைகள், கட்டடங்கள், மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் உள்பட பல்வேறு பணிகளின் தற்போதைய நிலவரங்கள் குறித்து பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள், ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்களுடன் கோப்புகளின் அடிப்படையில் கேட்டறிந்து ஆய்வு செய்தாா். பின்னா் அரசு ஒப்பந்தப் பணிகளை தரமான முறையில் கட்டி அதனை பூா்த்தி செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (நிா்வாகம்) எஸ்.ராமசந்தா், என்.எஸ்.ரவிச்சந்திரன் (கிராம ஊராட்சி), சங்ககிரி ேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் லோகநாதன், மகுடஞ்சாவடி, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், தேவூா், அரசிராமணி, இடங்கணசாலை, இளம்பிள்ளை, தாரமங்கலம் பேரூராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT