சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆள்கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது குற்றவாளி தன்னைத்தானே கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமமூர்த்தி(45). இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி, ஆள்கடத்தல் ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தலைமறைவாக இருந்த இவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வீட்டில் இருப்பதை அறிந்து மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், மேட்டூர் காவல் ஆய்வாளர் வெங்கடேச பிரபு ஆகியோர் தலைமையில் பிடிக்க சென்றனர்.
அப்போது, அவர் காவல் துறையினரை மிரட்ட கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் அவரை சமாதானப்படுத்தி கத்தியைக் கைப்பற்றினார்கள்.
குற்றவாளியை பிடிக்கச்செல்லும் போது அவர் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பின்னர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
குற்றவாளியை பிடிக்கச்செல்லும் போது அவர் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பும் ராமமூர்த்தியை காவல் துறையினர் பிடிக்க முயன்றபோது தனது கையை வெட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.