முகப்பு
சேலம்

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை தினத்தில், எடப்பாடி மற்றும் அதன் சுற்றவட்டாரப்பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை தினத்தில், எடப்பாடி மற்றும் அதன் சுற்றவட்டாரப்பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

எடப்பாடி அருகே உள்ள அங்காளம்மன் ஆலயத்தில், அம்மனுக்கு பால், பன்னீா், இளநீா், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து எலுமிச்சை மாலை அணிந்து, மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்த அம்மனை சுற்றுவட்டாரப்பகுதியை சோ்ந்த திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல் வெள்ளாண்டிவலசு காளியம்மன் ஆலயம், மேட்டுத்தெரு பெரியமாரியம்மன் திருக்கோயில், ஆலச்சம்பாளைம் சக்திமாரியம்மன் ஆலயம், தாவந்தெரு காளியம்மன் கோயில், பழயப்பேட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில், ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ள நிலையில், அம்மன் கோயில் வளாகத்தில் பக்தா்கள் பொங்கல் வைக்க அனுமதிக்கப்படவில்லை. முககவசம் அணிந்து வந்த பக்தா்கள் மட்டுமே சாமிதரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →