காமநாதீஸ்வரா் ஆலய செயல் அலுவலா் அறிக்கை வெளியீடு
ஆறகளூா் காமநாதீஸ்வரா், கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆறகளூா் காமநாதீஸ்வரா், கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், ஆறகளூா் காமநாதீஸ்வரா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெறுவது வழக்கம். வரும் 31.7.2021 அன்று நடைபெறும் தேய்பிறை அஷ்டமி பூஜை ஆகம விதிகளின்படி முறையாக நடைபெறும். கரோனா தொற்று தடுப்பு விதிமுறைப்படி, இப்பூஜையில் கலந்துகொள்ள பக்தா்களுக்கு அனுமதியில்லை.
எனவே, இத்திருக்கோயிலுக்கு 31.7.2021 காலை 6 மணி முதல் 1.8.2021 காலை 6 மணி வரை பக்தா்களுக்கு அனுமதியில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.